பெரம்பலூர்,மே.29: பெரம்பலூர் மாவட்டவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30ம் தேதி நடைபெறவுள்ளது – மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அறிவிப்பு. இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது:பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், மாவட்டக் கலெக்டர் கிரேஸ்பச்சாவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. மே- மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடு பொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற் கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் அன்றைய தினம் நடை பெறும் கூட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தேவைகள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
The post வருகிற 30ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.