‘வரி செலுத்தாத ஆம்னி பஸ்கள் சிறைபிடிப்பு’ என்ற அறிவிப்பால் பயணிகளுக்கு சிக்கல்

4 months ago 15

சென்னை: தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வரும் நிலையில், சோதனையின்போது வரி நிலுவை உள்ள ஆம்னி பேருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் சிறைபிடிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியது: “தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாப்படுகிறது. இந்நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உடனான பேச்சுவார்த்தை போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில், தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படாது என உரிமையாளர்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பயணச்சீட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு செயலிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Read Entire Article