வன்னியர் சங்கம் சார்பில் மே 11-ல் மாநாடு; பட்டியலின தலைவர்களும் பங்கேற்க வேண்டும்: ராமதாஸ் அழைப்பு

5 hours ago 3

வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் மே 11-ல் நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் நேற்று நடைபெற்றது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், வழக்கறிஞர் பாலு, பொருளாளர் திலகபாமா, சட்டமன்ற உறுப்பினர்கள் அருள், சிவக்குமார், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் கூட்டணி ஆட்சி தான் அமையும். பிரச்சினைகள் இல்லாமல் மாநாட்டை நடத்த வேண்டும். பாமகவுக்கு யாரும் எதிரி கிடையாது. பாமக நிறுவனர் ராமதாஸ் எல்லா சமுதாயத்திற்கும் சமமானவர். சாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு குறித்த பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மாநாடு நடைபெறுவதால் கோயில் கும்பாபிஷேகம் போல் நடத்தப்பட வேண்டும். மாநாட்டு கூட்டத்தை கண்டு ஆளுங்கட்சி பயப்பட வேண்டும். நமக்கான சாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்” என்றார்.

Read Entire Article