வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேறாமல் போனது யார் தவறு? - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

6 months ago 16

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்படாமல் போனது குறித்து சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கையில், அந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் போனதற்கு யார் மீது தவறு என்பதை விளக்கிக் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது ஜி.கே.மணி (பாமக) பேசும்போது, “தமிழகத்தில் முஸ்லிம்களுக்கும், அருந்ததியருக்கும் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டபோது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இப்போது வன்னியர்களுக்கு 10.5 உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறுவது ஏற்புடையதல்ல” என்றார்.

Read Entire Article