திருச்செங்கோடு, பிப்.13: திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் அருள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செங்கோடு நகர் பகுதியில் செயல்படும் வணிக நிறுவனங்கள், 2025-26ம் ஆண்டிற்கான தொழில் உரிமங்களை, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமம் பெறாத நிறுவனங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டால், உடனடியாக நகராட்சியால் மூடி சீல் வைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் கட்டாயம் appeared first on Dinakaran.