வடிவுடையம்மன் கோயில் குளத்தில் குப்பை கழிவுகள் அகற்றம்

2 months ago 9

திருவொற்றியூர்: திருவொற்றியூர் சன்னதி தெருவில் வடிவுடையம்மன் கோயில் வாசலில் திருக்குளம் உள்ளது. இந்த குளத்தில் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் குப்பை கழிவுகள் மிதந்ததால் குளம் மாசு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதை சீரமைத்து தர வேண்டும் என்று பக்தர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் குளத்தை சீரமைக்கும் மாஸ் கிளீனிங் நிகழ்ச்சி மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து குளத்தின் நீரில் மிதந்து கொண்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பேப்பர் குப்பையை அப்புறப்படுத்தி தூய்மை செய்தனர்.அப்போது திருக்கோயில் குளத்தை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரி வேளாங்கண்ணி, என்விரோ, கவுதம், விக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வடிவுடையம்மன் கோயில் குளத்தில் குப்பை கழிவுகள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article