சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.6,800 கோடியில் 281 பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) சார்பில், திரு.வி.க. நகர் தொகுதி, பெரம்பூர், சந்திரயோகி சமாதி சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடம், கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் மற்றும் புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலையில் கட்டப்பட்டு வரும் சலவைக் கூடம் உள்ளிட்ட பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.