வங்கிகளில் சிறப்பு அதிகாரி வேலை.. 1,007 பணியிடங்கள்

8 hours ago 4

சென்னை,

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி பற்றிய விவரங்கள் பின் வருமாறு:

பணியிடங்கள்: சிறப்பு அதிகரி (எஸ்.ஓ)- 1,007 காலிப்பணியிடங்கள்

கல்வி தகுதி: என் ஜீனியரிங் டிகிரி, முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. 65 சதவீத மதிப்பெண்களுக்க்கு குறையாமல் மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.கல்வி தகுதி பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும்.முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் உறுதி செய்து கொள்ளலாம்

வயது வரம்பு: 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ.48480 – 85920/-

தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின்ஸ் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதன்மை தேர்வு தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், மதுரை, நாகர்கோவில்/ கன்னியாகுமரி, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், திண்டுக்கல், தரம்புரி, நாமக்கல், தூத்துக்குடி, திருப்பூர், விழுப்புரம் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

தேர்வுக்கட்டணம்: ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.175 கட்டணம் ஆகும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்; 21.07.2025

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.ibps.in/index.php/specialist-officers-xv/

Read Entire Article