சென்னை: வங்கக்கடலில் டிச.16-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியதாவது; தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற உள்ளது. இது தொடர்ந்து வேகமாக மேற்கு திசையில் பயணித்து டிச.16ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக வருகை தரும்.
இது மேலும் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுந்த தாழ்வு மண்டலமாகவும் மாறுவதற்கான வாய்ப்புள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து நகரும் போது படிப்படியாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவது ஒட்டுமொத்த தமிழகத்திலும் மழை பெய்யும். குறிப்பாக டிச.17, 18 தேதிகளில் வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பரவலாக பருவமழை தீவிரமடைந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.