லேப்டாப் திருடியவர் கைது

6 hours ago 3

 

மதுரை, ஜூன் 27: மதுரை தெப்பகுளம் மாரியம்மன் கோவில் தெற்கு வீதியை சேர்ந்த மணிகண்டன் (45) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 20ம் தேதி நள்ளிரவில் தனது நண்பருடன் புதுக்கோட்டைக்கு செல்வதற்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்தில் அமர்ந்து இருந்தனர். அப்போது அலங்காநல்லூர், கோடங்கிப்பட்டி ஊரை சேர்ந்த கார்த்திக் என்பவர் அவர்கள் அருகே வந்து அமர்ந்து பேச்சுக்கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் கார்த்திக், மணிகண்டனின் லேப்டாப் பேக்கை எடுத்துக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கி தப்பி ஓடியுள்ளார். இதனை அறிந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் இருவரும் கார்த்திக்கை தேடி மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முழுவதும் சுற்றித்திரிந்த நிலையில் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து நேற்று முன்தினம் மதுரை மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கார்த்திக்கை கைது செய்து அவரிடமிருந்து 2 லேப்டாப்களையும் பறிமுதல் செய்தனர்.

The post லேப்டாப் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article