லாஸ் ஏஞ்சல்சில் 2 காவலர்களை சுட்ட நபர் கைது

4 months ago 11

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஷாப்பிங் மாலில் ஒரு கடையில் சுமார் 1,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமான பொருட்களை திருடி சென்ற நபரை காவலர்களை தடுக்க முயன்றனர். அப்போது அந்த நபர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 காவலர்கள் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில், காவலர்களை துப்பாக்கியால் சுட்ட நபரை கலிபோர்னியாவின் வெஸ்லேக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து நேற்று கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article