லாரிகளில் பேட்டரி திருடிய 2 பேர் கைது

4 hours ago 4

 

நரசிங்கபுரம், ஜூன் 26: ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி (54). புங்கவாடியை சேர்ந்தவர் குன்னையன் (45). இருவரும் லாரிகளை, பழுது பார்க்கும் பணிக்கு, நரசிங்கபுரத்தில் உள்ள சேகர் என்பவரின் பட்டறையில் நிறுத்தி இருந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன், 2 லாரிகளில் இருந்தும் 4 பேட்டரிகள் திருடுபோனது. இதுபற்றி ஆத்தூர் நகர போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், சிங்கபுரம் செக்குமரத்தெருவை சேர்ந்த சரத்குமார் (32), ராமநாயக்கன்பாளையம் ஊத்துமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) என்பதும், பட்டறையில் நிறுத்தியிருந்த லாரிகளில் பேட்டரியை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

The post லாரிகளில் பேட்டரி திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article