தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தானது, நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 18000 கனஅடியாக இருந்தது. தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 24,000 கன அடியாக அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடையானது இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.
The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு..! appeared first on Dinakaran.