லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத் துறையினர் சோதனை

3 months ago 13

கோவை: கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்றது. தவிர, கூடுதலாக இன்று மேலும் இரு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்பனை செய்து வருமானம் ஈட்டியதாக, கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையின் சோதனை நடத்தினர். இதில், லாட்டரி விற்பனை மூலமாக முறைகேடாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதையும், அதை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மார்ட்டின் முதலீடு செய்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

Read Entire Article