திருப்பூர்: திருப்பூர் லட்சுமிநகர் பகுதிகளில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் பல உள்ளன. இதன் காரணமாக இந்த பகுதியில் அதிகளவு குப்பைகள் சேகரமாகி வருகிறது. இதற்கிடையே குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படாமல் இருப்பதால், அந்த பகுதியில் குவிந்து கிடக்கிறது. இதனால், காற்றில் குப்பைகள் பகுதி முழுவதுமாக செல்கிறதுஇதுபோல் ஒருவித துர்நாற்றமும் வீசி வருகிறது.
அந்த பகுதியை கடந்து செல்கின்ற பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். எனவே, குப்பைகளை உடனுக்குடன் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post லட்சுமி நகரில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.