அதிமுகவை உடைக்க முடியாது; ஒற்றுமையாக தான் இருக்கிறோம்: செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இபிஎஸ் பதில்

7 hours ago 3

அதிமுகவை உடைக்க முடியாது. நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். பிரிக்க முயற்சி செய்தால், அவர்கள் தான் மூக்கு உடைந்து போவார்கள் என அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் விவகாரத்தில், எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை நீக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அதன்பேரில் இன்றைக்கு சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “எதிர்கட்சித் தலைவர் ஆளுநர் உரையில் 2.52 மணி நேரம் பேசினார். அவர்கள் பேசுவதற்கு எந்த தடையுமில்லை.” என்று குறிப்பிட்டார். இதில் ஒரு மணி நேரம் ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மட்டுமே பேசினர்.

Read Entire Article