லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை..

7 months ago 27
சான்றிதழ்கள் வழங்க 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார், துணை தாசில்தாருக்கு தலா 2 ஆண்டுகளும், அலுவலக உதவியாளருக்கு ஓராண்டும் கடலூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சாதிசான்று உள்பட பல்வேறு சான்றிதழ்களை கேட்டு இ-சேவை மூலமாக விண்ணப்பித்த டி.பவழங்குடியைச் சேர்ந்த கமுர்நிஷாவிடம் வட்டாட்சியர் கண்ணன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. கமுர்நிஷா அளித்த புகாரில் லஞ்சம் பெறும் போது வட்டாட்சியர் கண்ணன், துணை வட்டாட்சியர் அருள்பிரகாசம், அலுவலக ஊழியர் உத்திரவன்னியன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
Read Entire Article