ரேஷனில் பொருட்கள் வழங்க புதுச்சேரி அரசுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி

3 months ago 14

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து பொருட்களை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம், பயோமெட்ரிக்கை உறுதி செய்து உணவு தானிய விநியோகத்தில் கசிவு ஏற்படாமல் பயனாளிகளுக்கு முறையாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது அரசுக்கும், அப்போதைய ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு ரேஷன் கடைகள் மூடப்பட்டன. அதனால் பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் தரும் முறை வந்தது. ஆனால், அரிசி விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் ரேஷனில் பொருட்கள் வழங்கும் முறையை அனுமதிக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புதுச்சேரி அரசு கடிதம் எழுதியது.

Read Entire Article