ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

1 week ago 4

சென்னை,

உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக நேற்று இரவு டெல்லி ரெயில்வே நிலையத்தில் அதிகளவில் பயணிகள் திரண்டிருந்தனர். இந்த சூழலில், அவர்கள் பயணிக்க வேண்டிய ரெயில் வேறொரு தண்டவாளத்தில் வந்தால் பயணிகள் முந்திக்கொண்டு ரெயிலில் ஏற முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த சோகமான சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள வேண்டி ரெயிலைப் பிடிக்க அதிகளவில் பக்தர்கள் திரண்டதால் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பயணிகள் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் பூரண உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்."

என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Read Entire Article