ரெட்டியார்சத்திரத்தில் வாக்காளர் சேர்ப்பு முகாமில் ஆய்வு

7 months ago 21

 

ரெட்டியார்சத்திரம், நவ. 18: ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள வாக்காளர் சேர்க்கை முகாம்களில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளருமான கள்ளிப்பட்டி மணி மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி,

ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ்பெருமாள், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராஜேஸ்வரிதமிழ்ச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் சுப்புலெட்சுமி சண்முகம், கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், பேரூராட்சி மன்றத்தலைவர் தனலெட்சுமிசண்முகம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் சகிலாராஜா உட்பட திமுக நிர்வாகிகள் பலர் பள்ளிகளுக்கு சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம்களை பார்வையிட்டு புதிய வாக்காளர்களை சேர்த்தனர்.

The post ரெட்டியார்சத்திரத்தில் வாக்காளர் சேர்ப்பு முகாமில் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article