சேலம்: திமுக ஆட்சி முடிவதற்குள் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி சாதனை படைத்து விடுவார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நிதி மேலாண்மையில் எனக்கு புரிதல் இல்லை என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். தற்போதைய திமுக ஆட்சியில் ரூ.3 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடன் வாங்கி, இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் என்ற சாதனையைப் புரிந்துள்ளனர்.