அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சிறுநீரக செயலிழப்புக்குள்ளான நோயாளிகளின் உயிரை காத்திட, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் வரை, ‘ஹீமோ டயாலிசிஸ்’ என்ற ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சையை மேற்கொள்ள சிறுநீரக மருத்துவர்கள், ரத்தநாள மருத்துவ நிபுணர்கள், இதய மருத்துவ நிபுணர்கள் போன்றவர்களின் ஆலோசனையும், கண்காணிப்பும் அவசியம். ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை டெக்னீசியன்களும் அவசியம்.