தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்களை வகுப்பதிலும், நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதிலும் தமிழக அரசுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2003-04 நிதியாண்டு முதல் ‘நிழல் நிதிநிலை அறிக்கை’யை பாமக தயாரித்து வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், 2025-26 நிதியாண்டுக்கான ‘நிழல் நிதி அறிக்கை’யை திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோர் நேற்று வெளியிட மூத்த செய்தியாளர் தங்கவேலப்பன் பெற்றுக்கொண்டார்.