ரூ.2 கோடியில் சிந்தாதிரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி: நவம்பரில் பயன்பாட்டுக்கு வருகிறது

3 months ago 10

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.2 கோடியே 19 லட்சத்தில் 102 கடைகளுடன் அமைக்கப்பட்டு வரும் நவீன மீன் அங்காடி அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியுள்ளார்.

சிந்தாதிரிப்பேட்டையில் பல ஆண்டுகளாக தனியாருக்குச் சொந்தமான இடத்தில் மீன் அங்காடி செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மீன் கடைகள் உள்ளன. இந்த மீன் அங்காடியால் சுற்றுப்புறங்களில் துர்நாற்றம் வீசி வருகிறது. அங்கு கழிவு மேலாண்மை முறையாக செய்யப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

Read Entire Article