பரமத்திவேலூர், மே 14: பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு, 5,365 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக தேங்காய் கிலோ ரூ.55.55க்கும், குறைந்தபட்சமாக ரூ.35.29க்கும், சராசரியாக ரூ.52.52க்கும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக ரூ.2.62 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 5,158 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அதிகபட்சமாக தேங்காய கிலோ ரூ.53.53க்கும், குறைந்தபட்சமாக ரூ.36.71க்கும், சராசரியாக ரூ.51.51க்கும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக நேற்று ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 39க்கும் ஏலம் நடைபெற்றது.
The post ரூ.2.51 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் appeared first on Dinakaran.