மதுரை: “பாமக விவகாரத்தில் குருமூர்த்தியை வைத்து பாஜக சமரசம் செய்யவில்லை. அவரது முயற்சிக்கும், பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரை ஒத்தக்கடை வேலம்மாள் மைதானத்தில் ஜூன் 8-ல் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இந்த கூட்டத்துக்கான பந்தல்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.