சென்னை : ரூ.17 கோடி மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சரின் மகன் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தூத்துக்குடி தெற்கு பகுதி அதிமுக செயலாளர் ராஜா கட்சியில் இருந்து நீக்கம் செய்து பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிமுகவினர் யாரும் ராஜாவுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகன் ராஜாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நேற்று கைது செய்தது.
The post ரூ.17 கோடி மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சரின் மகன் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் appeared first on Dinakaran.