ரூ.12 கோடி மோசடியில் நடன இயக்குனர் மீது வழக்கு

3 months ago 18

தானே: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் 26 வயதான நடன கலைஞர் ஒருவர் ரூ.11.96 கோடி மோசடி செய்யப்பட்டதாக மீரா ரோடு போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரில் கடந்த 2018ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை மனுதாரர் மற்றும் அவரது குழுவினர் ஏமாற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நடன குழு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளது.

இதற்காக அவரது குழுவுக்கு ரூ.11.96கோடி பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நடன இயக்குனர் ரெமோ டிசோசா, அவரது மனைவி மற்றும் ஐந்து பேர் அந்த குழுவினருடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துவிட்டு தங்களது குழு என்று கூறி பரிசுத்தொகை ரூ.11.96கோடியை பெற்று மோசடி செய்துவிட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post ரூ.12 கோடி மோசடியில் நடன இயக்குனர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article