சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.52 கோடியில் அமைக்கப்பட்ட 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ரூ.60 கோடியில் அமைக்கப்பட்ட 50 ஊரக, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘நகர்ப்புறங்களில் மக்கள் அதிக அளவில் அரசுப் பொது மருத்துவமனையை நோக்கி வருவதால், மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது. இந்த நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கும் நோக்கில், சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 63 நகராட்சி பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ரூ.177 கோடியில் புதிதாக அமைக்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு 110-வது விதியின்கீழ் அறிவித்தார்.