ரூ.100 கோடி இயந்திரங்களை விற்ற சர்க்கரை ஆலை மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

2 days ago 2

சென்னை: வங்கி கடனுக்கு அடமானமாக வைக்கப்பட்ட ரூ. 100 கோடி மதிப்புள்ள இயந்திரங்களை திருட்டுத்தனமாக விற்ற தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க, சிபிஐ-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பழையசீவரத்தில் உள்ள பத்மாதேவி சுகர்ஸ் என்ற தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ. 120 கோடியும், மற்ற வங்கிகள், ஸ்ரீநிதி ஃபைனான்ஸ் உள்ளிட்ட பிற நிதி நிறுவனங்களிலும் கோடிக்கணக்கில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

Read Entire Article