ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

4 hours ago 2

ராமேசுவரம்,

மீன்பிடி தடைக்கால சீசன் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. காற்றின் வேகம் குறைந்த நிலையில் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து கடந்த 17-ந்தேதி, மீன் துறை அதிகாரிகளிடம் அனுமதி டோக்கன் பெற்று 105 விசைப்படகுகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர்.

நேற்று காலை அனைவரும் கரை திரும்பினார்கள். மீனவர்கள் வலையில் சீலா, மாவுலா, பாறை, முரள், களவாய், கணவாய், கடல் விரால், கிளாத்தி, திருக்கை, காரல், தடியன், விளை, கிளி உள்ளிட்ட பல வகையான மீன்கள் கிடைத்திருந்தன. 2 மாத தடைக்காலம் முடிந்து முதல் முறையாக மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய ஒவ்வொரு படகிலும் சுமார் 2 டன் வரை மீன்கள் கிடைத்திருந்தன. ஒரு சில படகுகளில் 3 டன் வரையிலும் மீன்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளனர். மீனவர்களை தாக்கி விரட்டியடித்துவிட்டு, அவர்களிடம் இருந்த மீன்களை இலங்கை கடற்படையினர் அள்ளிச் சென்றதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் மீனவர்களின் படகு ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், நேற்று கடலுக்கு போயிருந்தோம். முதல் நாளே இலங்கை கடற்படை எங்களை தாக்கியதுமீன், இறால், நண்டு எல்லாவற்றையும் அள்ளிச் சென்றுவிட்டார்கள். எங்கள் அனைவரும் முட்டி போட வைத்து மிரட்டினார்கள். கெட்ட வார்த்தையில் திட்டினார்கள். பின்னர், எங்களை இந்தியா செல்லுங்கள்.. இந்தியா செல்லுங்கள் என்று கூறினார்கள் என்று தெரிவித்தார்.

Read Entire Article