‘ராமர் பாலத்தை தரிசித்தேன்’ - ஹெலிகாப்டர் பயண அனுபவத்தை பகிர்ந்த பிரதமர் மோடி!

2 weeks ago 4

ராமேஸ்வரம்: “இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமநவமி நாளில் ராமர் சேதுவை தரிசனம் செய்யும் பாக்கியமும், ராம்லாலாவின் சூரிய திலகத்தை தரிசனம் செய்யும் பாக்கியமும் கிடைத்தது.” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

பாம்பனில் அமைந்துள்ள பழைய ரயில் பாலம் பழுதடைந்ததைத் தொடர்ந்து புதிய ரயில் தூக்குப் பாலம் கட்டப்பட்டது. இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அனுராதபுரத்திலிருந்து இன்று காலை இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, நண்பகல் சுமார் 12.20 மணி அளவில் மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு வந்தடைந்தார்.

Read Entire Article