ராமதாசை சந்தித்தது ஏன்? - செல்வப்பெருந்தகை பதில்

8 hours ago 3

விழுப்புரம்,

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இன்று பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினார். திண்டிவனம், தைலாபுரத்தில் உள்ள ராமதாசின் இல்லத்தில் அவரை செல்வப்பெருந்தகை சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகையிடம், ராமதாசுடனான சந்திப்பு குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை கூறியதாவது;

"பாமக நிறுவனர் ராமதாஸை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ராமதாசுடன் அரசியல் பேசவில்லை. பாமகவிற்குள் குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு பாஜக தான் காரணம். அக்கட்சியை ஸ்வாகா பண்ண பாஜக முயல்கிறது. அடுத்து அண்ணாவை கொச்சைப்படுத்தி அதிமுகவிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

கூட்டணி தொடர்பாக தமிழகத்திற்கு அவசியமான முடிவை ராமதாஸ் எடுப்பார். திமுக கூட்டணியில் பாமக இணைவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்."

இவ்வாறு அவர் பேசினார்.

 

Read Entire Article