ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ரயில்களில் டைனமிக் கட்டண முறையை நீக்க ஏ.பி.ஜி.பி. நுகர்வோர் அமைப்பு மனு

5 hours ago 2

சென்னை: ​ராஜ்​தானி, துரந்​தோ, சதாப்தி உள்​ளிட்ட விரைவு ரயில்​களில் டைனமிக் கட்டண முறையை நீக்​கக் கோரி, ரயில்வே அமைச்​சருக்கு அகில பார​திய கிராஹக் பஞ்​சா​யத்து நுகர்​வோர் அமைப்பு நிர்​வாகி​கள் மனு அளித்​தனர். புதுடெல்​லி​யில், ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவை அகில பார​திய கிராஹக் பஞ்​சா​யத்து நுகர்​வோர் அமைப்பு (ஏ.பி.ஜி.பி. நுகர்​வோர் அமைப்​பு) நிர்​வாகி​கள் அண்​மை​யில் சந்​தித்​து, பிரீமி​யம் ரயி​லில் டைனமிக் கட்டண முறையை நீக்​கு​வது உட்பட பல்​வேறு கோரிக்​கைகள் தொடர்​பாக மனு அளித்​தனர்.

அதில் அவர்​கள் தெரி​வித்​துள்​ள​தாவது: ராஜ்​தானி, துரந்​தோ, சதாப்தி மற்​றும் பிரீமி​யம் ரயில்​களில், படிப்​படி​யாக அதி​கரிக்​கும் டைனமிக் கட்டண முறையை நீக்க வேண்​டும். ரயில் பயணி​களுக்​கான முன்​ப​தி​வில் கடைசி​யாக அட்​ட​வணையை வெளி​யிடும்​போது, காத்​திருப்​போர் பட்​டியலில் உள்ள டிக்​கெட்​களுக்கு ரத்து கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​வதை நிறுத்த வேண்​டும்.

Read Entire Article