ராஜி​னாமா அறி​விப்பை திரும்ப பெற்​றார் துரை வைகோ: மதி​முக​வில் உட்​கட்சி மோதல் முடிவுக்கு வந்​தது

2 hours ago 1

சென்னை: மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா வருத்​தம் தெரி​வித்​ததையடுத்​து, உட்​கட்சி மோதல் முடிவுக்கு வந்​தது. தனது ராஜி​னாமா அறி​விப்​பை​யும் திரும்​பப் பெறு​வ​தாக முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ அறி​வித்​துள்​ளார். மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்​யா, முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ இடையே​யான பனிப்​போர் அண்​மை​யில் நடை​பெற்ற மதி​முக தொழிலா​ளரணி கூட்​டத்​தில் வெளிப்​பட்​டது. இரு தரப்​பினரை​யும் சமா​தானப்​படுத்​தும் வகை​யில் நிர்​வாகக் குழு கூட்​டம் நடை​பெற்​றது.

இதில் பங்​கேற்​கும் முன் முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “உட்​கட்சி விவ​காரத்தை வீடியோ எடுத்து வெளி​யிட்​டு, கட்​சிக்​குள் குழப்​பத்தை ஏற்​படுத்​தி​யது அவர் தான். கட்​சிக்கு அவதூறாக சமூக வலை​தளத்​தில் பதி​விடக் கூடாது” என்​றார். இதேபோல், துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா வெளி​யிட்ட சமூக வலைதள பதி​வில், “நான் வைகோ​வின் சேனா​திபதி என்​ப​தற்கு அவர் முகம் பதித்த மோ​திரம் அணிந்​திருப்​பதே அடை​யாளம்” என கூறியிருந்​தார்.

Read Entire Article