ராஜஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.6 ஆக பதிவு

1 month ago 7

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் மாநிலம் பிகானேர் பகுதியில் இன்று பிற்பகல் 12.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.76 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 73.72 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Read Entire Article