ராஜஸ்தானில் உயிரிழந்த ராணுவ வீரர் முத்துவின் உடலுக்கு அரசு மரியாதை

7 months ago 21

மதுரை: ராஜஸ்தான் மாநிலத்தில் பணியின் போது, விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

தேனி அல்லி நகரத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் முத்து (38). இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 10-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பகுதியில் நடந்த ராணுவ பயிற்சியின்போது, எதிர்பாராத விதமாக வாகன விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் ராணுவ வீரர் முத்துவின் உடலை சொந்த ஊரான தேனி மாவட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் உடல் மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

Read Entire Article