ராஜபாளையம் அருகே கோஷ்டி மோதலில் 5 பேர் காயம்

2 days ago 5

ராஜபாளையம், ஏப்.17: ராஜபாளையம் அருகே கோஷ்டி மோதலில் 5 பேர் காயமடைந்தனர். 3 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜபாளையம் அருகே சோழாபுரம் பகுதியில் வசிப்பவர் இசக்கிராஜ்(43). இவர் தனது பகுதியில் திருவிழா காலங்களிலும், விசேஷ நாட்களிலும் தோரணம் மற்றும் கொடிக்கம்பம் வைப்பதையும் ஒலி பெருக்கி போட்டுவருவதையும் அதே ஊரை சேர்ந்த துரைப்பாண்டி என்பவர் தடுத்து பிரச்சனை செய்து வந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இசக்கிராஜ் உள்பட 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் ஆம்புலனஸ் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து இசக்கி ராஜ் தளவாய்புரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டதாக துரைப்பாண்டி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 3 பேரை கைது செய்தனர்.

The post ராஜபாளையம் அருகே கோஷ்டி மோதலில் 5 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article