'ரா' உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம்

5 hours ago 2

இந்தியாவின் 'ரா' உளவு அமைப்பின் தலைவராக பதவி வகித்து வரும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் வருகிற 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் 'ரா' உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

'ரா' உளவு அமைப்பின் தலைவராக ஜூலை 1-ம் தேதி பதவியேற்கும் பராக் ஜெயின் 2 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1989-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த பராக் ஜெயின், ரா உளவு அமைப்பில் பல ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article