ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல்.. 2வது முறையாக குறிவைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி..!!

5 months ago 17

மும்பை: மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று (டிசம்பர் 12) மதியம் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ரஷிய மொழியில் எழுதப்பட்ட அந்த வெடிகுண்டு மிரட்டலானது வந்துள்ளது. பின்னர் மும்பையில் உள்ள மாதா ரமாபாய் மார்க் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

முன்னதாக நவம்பர் 16ம் தேதி, ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி என்று கூறிக்கொண்டார். மேலும் மிரட்டல் விடுப்பதற்கு முன் தொலைபேசியில் அவர் ஒரு பாடலைப் பாடியதாகக் கூறப்படுகிறது. நடப்பாண்டில் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல்.. 2வது முறையாக குறிவைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி..!! appeared first on Dinakaran.

Read Entire Article