ரயில்வே ஓட்டுநர் பணி தொடர்பாக ஆய்வு செய்ய கோரிக்கை

1 week ago 6

சென்னை: ரயில் ஓட்​டுநரின் பணி தொடர்​பாக உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தரவின்டி ​தாமதிக்காமல் ஆய்வு செய்ய வேண்​டும் என்று ரயில் ஓட்​டுநர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். வார ஓய்வு உட்பட பல்​வேறு கோரிக்​கைளை வலி​யுறுத்தி ரயில் ஓட்​டுநர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதைத் தொடர்ந்​து, இது தொடர்​பாக ஆய்வு செய்ய பல்​வேறு விஷ​யங்​களுக்​கான ஒழுங்​கு​முறை குழுவை ரயில்வே வாரி​யம் கடந்த ஆண்டு அமைத்​தது.

இந்​நிலை​யில், ரயில் ஓட்​டுநரின் பணி தொடர்​பாக ஆய்வு செய்ய வேண்​டும் என்று கோரிக்கை எழுந்​துள்​ளது. இதுகுறித்​து, ரயில் ஓட்​டுநர்​கள் கூறிய​தாவது: ரயில் ஓட்​டுநரின் பணி நேரம், ஓய்வு ஆகிய குறை​களை முக்​கி​ய விஷய​மாக இந்த குழு பார்க்​க​வில்​லை. ரயில் ஓட்​டுநர் உடல்​நலம் மற்​றும் ரயில்வே பாது​காப்பு ஆகிய​வற்றை உறுதி செய்​வதற்கு ரயில் ஓட்​டுநர்​களின் குறை​களுக்கு தீர்வு காண வேண்​டும்.

Read Entire Article