கோவில்பட்டி, ஏப்.18: தூத்துக்குடி பரிவல்லிக்கோட்டையைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (40). ரயில்வே ஊழியரான இவர், தண்டவாள பாதையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணியாச்சி ரயில்வே கேட் கீப்பர் வேலை செய்து வந்த முன்னாள் ராணுவ வீரர் முருகன் என்பவருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முருகன் அங்கிருந்த மண்வெட்டி கணையால் ஜார்ஜை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக தூத்துக்குடி ரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கேட் கீப்பர் முருகனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.
The post ரயில்வே ஊழியரை தாக்கிய கேட் கீப்பர் கைது appeared first on Dinakaran.