ரயில் மூலம் கஞ்சா கடத்திய வட மாநில வாலிபர்கள் கைது

2 hours ago 1

 

திருப்பூர், பிப்.24: திருப்பூருக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் ரயில் நிலைய பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் ஒருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஷாம்குமார் யாதவ் (21) என்பதும், அவரிடம் 800 கிராம் கஞ்சாவும், மற்றொருவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரேமானந் மாலிக் (22) என்பதும், அவரிடம் 150 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷாம்குமார் யாதவ் மற்றும் பிரேமானந் மாலிக் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post ரயில் மூலம் கஞ்சா கடத்திய வட மாநில வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article