சென்னை: ரயில்கள், ரயில் நிலையங்களில் ஏதாவது குற்றங்கள் நடைபெற்றால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்களுக்கு ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் அறிவுறுத்தி உள்ளார்.
ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்), தமிழக ரயில்வே காவல்துறை ஆகியவற்றின் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் இன்று (மார்ச் 10) நடைபெற்றது. இதில், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது: “மாணவர்களுக்கு இடையே நல்ல நட்பு இருக்க வேண்டும். அதேநேரத்தில், நண்பன் தவறு செய்யும்போது, அதை ஊக்கப்படுத்தாமல் தட்டிக் கேட்க வேண்டும். மாணவர்கள் நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.