ரம்ஜான் பண்டிகை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து

1 day ago 4

புதுடெல்லி,

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஈத் (ரம்ஜான் பண்டிகை) புனித ரமலான் மாதத்தின் நோன்பு மற்றும் பிரார்த்தனையின் முடிவை குறிக்கிறது. இந்த பண்டிகை சகோதரத்துவம், ஒத்துழைப்பு மற்றும் இரக்க உணர்வை வலுப்படுத்துகிறது. இந்த பண்டிகை இணக்கமான, அமைதியான மற்றும் வளமான சமூகத்தை உருவாக்க நம்மை ஊக்குவிக்கிறது. இந்த பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் அமைதி, முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும்.

மேலும் நேர்மறையான அணுகுமுறையுடன் முன்னேற நமக்கு பலத்தைத் தரட்டும். இந்த புனிதமான நாளில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Read Entire Article