சென்னை: ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டிகள் தொடர் இன்று மீண்டும் துவங்குகிறது. இன்றைய போட்டியில் தமிழ்நாடு – ஜார்க்கண்ட் அணிகள் மோதவுள்ளன. உள்நாட்டு டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி அக்.11ம் தேதி தொடங்கியது. இடையில் சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20, விஜய் ஹசாரே கோப்பை ஒரு நாள் போட்டிகளுக்காக நவ.16ம் தேதியுடன் இடை நிறுத்தம் செய்யப்பட்டது. தற்போது அந்தப்போட்டிகள் முடிந்த நிலையில் ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடர் இன்று மீண்டும் தொடங்குகிறது. களம் காணும் 38 அணிகள் மோதும் போட்டிகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடக்கின்றன. எலைட் டி பிரிவில் உள்ள தமிழ்நாடு-சண்டீகர் அணிகள் இன்று மோதும் போட்டி சேலத்தில் உள்ள எஸ்சிஎப் கிரிக்கெட் திடலில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு இதுவரை விளையாடிய 5 லீக் போட்டிகளில் 2ல் வெற்றியும், 3ல் டிராவும் செய்துள்ளது. அதனால் 19 புள்ளிகளுடன் முதல் இடத்தில் காலிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. எஞ்சிய 2 போட்டிகளில் சண்டீகர், ஜார்கண்ட் அணிகளை வீழ்த்தினால் காலிறுதிக்கு தமிழ்நாடு முன்னேறும். இன்று தமிழ்நாட்டை எதிர்க்கும் ஜார்கண்ட் அணியும் 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் உள்ளது. எனினும் ரன் ரேட் குறைவாக உள்ளதால் 2வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெல்வதன் மூலம் தமிழ்நாடு முதல் இடத்தில் தொடரும்.
அதேபோல் எலைட் பி பிரிவில் உள்ள புதுச்சேரி – ஆந்திரா அணிகள் மோதும் போட்டி இன்று காலை புதுச்சேரி கிரிக்கெட் சங்க அரங்கில் ஆரம்பிக்கிறது. இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத புதுச்சேரி, பி பிரிவு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் நட்சத்திர வீரர்களும் ரஞ்சி தொடரில் களம் காண இருக்கின்றனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்று மும்பை அணிக்காகவும், ரயில்வே அணிக்காக விராட் கோஹ்லியும் விளையாட உள்ளனர்.
The post ரஞ்சி கோப்பை மீண்டும் தொடக்கம் ஜார்க்கண்ட் அணியுடன் தமிழ்நாடு மோதல் appeared first on Dinakaran.