“ரஜினி அரசியலுக்கு வராததால் விஜய்யை பாஜக களம் இறக்கியுள்ளதா?” - சபாநாயகர் அப்பாவு சந்தேகம்

4 months ago 17

திருநெல்வேலி: “நடிகர் ரஜினி அரசியலுக்கு வராத காரணத்தால் பாஜக தான் விஜய்யை இறக்கி இருப்பார்களோ? என்ற சந்தேகம் எழுகிறது. நடிகர் விஜய் வருமானவரித் துறை சோதனையில் சிக்கிய போது திமுக தான் அவருக்கு, ஆதரவாக குரல் கொடுத்தது.” என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (அக்.28) தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “பாபநாசம் அணையில் இன்று திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் சுமார் 86,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயன்பெறுவார்கள். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு 400 கோடி ரூபாயில் மூன்று லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்யும் அளவுக்கு குடோன்கள் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ரேஷன் கடைகளில் தரமான அரிசி தற்போது மக்களுக்கு கிடைக்கிறது.

Read Entire Article