ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் மெகா ஏலம் வரும் 24, 25 ஆம் தேதிகளில் நடைபெறும் என தகவல்..!!

7 months ago 18


டெல்லி: கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் மெகா ஏலம் வரும் 24, 25 ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெற கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 22 ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் 22 முதல் 26ஆம் தேதிவரை நடைபெற உள்ள நிலையில் இதற்கிடையே சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளதாக தெரிகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியை ஒளிபரப்ப உரிமம் பெற்றுள்ள டிஸ்னி ஹாட்ஸ்டார் ஐபிஎல் மெகா ஏலத்தை ஒளிபரப்பும் உரிமத்தையும் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கும், சவூதி அரேபியாவுக்கு 8 மணி நேரம் வித்தியாசம் என்பதால் டெஸ்ட் போட்டி ஒளிபரப்பு முடிந்த பிறகு பிற்பகலில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்தும் வகையில் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 10 அணிகளும் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட ரிஷப் பந்த் , கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் எந்த அணியில் இணைய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

 

The post ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் மெகா ஏலம் வரும் 24, 25 ஆம் தேதிகளில் நடைபெறும் என தகவல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article