“காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்துக்காக முதல்வர் பதவி விலக வேண்டும்” - அன்புமணி

3 hours ago 1

சென்னை: திருப்புவனம் காவல் நிலையத்தில் இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். மனசாட்சி இருந்தால் முதல்வர் விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மனித உரிமைகளை சிறிதும் மதிக்காமல் ஸ்டாலின் காவல்துறை இளைஞரை அடித்தே கொலை செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

Read Entire Article