ரங்கம் சட்டமன்ற அலுவலகத்தில் புதிய இ-சேவை மையம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

4 hours ago 1

 

திருச்சி, மே 7: திருச்சி ரங்கம் சட்டமன்ற அலுவலகத்தில் இ-சேவை மையத்திற்கான புதிய கட்டிடத்தை எம்எல்ஏ பழனியாண்டி நேற்று திறந்து வைத்தார்.திருச்சி ரங்கம் சட்டன்ற அலுவலகத்தில் இயங்கி வந்த இ-சேவை மையத்திற்கான புதிய கட்டிடத்தை எம்எல்ஏ பழனியாண்டி நேற்று திறந்து வைத்து பெண் பயனாளி ஒருவருக்கு சான்றிதழ் வழங்கினார்.நிகழ்ச்சியில் திமுக அந்தநல்லூர் ஒன்றிய துணைச் செயலாளர் மலர் அறிவரசன், திமுக நிர்வாகிகள் கைக்குடி சாமி, அதவத்தூர் கொடியரசு, ரங்கம் சந்தோஷ், பாகனூர் செங்காயன், குமார வயலூர் இன்ஜினியர் கார்த்திக் மற்றும் சோமரசம்பேட்டை ரவிச்சந்திரன், திருச்சி லெட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ரங்கம் சட்டமன்ற அலுவலகத்தில் புதிய இ-சேவை மையம் எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article